தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிறுவன நாள்

பழனியில் திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 36 ஆவது நிறுவிய (ஸ்தாபக) தினம் கொண்டாடப்பட்டது.

பழனியில் திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 36 ஆவது நிறுவிய (ஸ்தாபக) தினம் கொண்டாடப்பட்டது.
 பழனி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வட்டக்கிளை தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்து சங்கக் கொடியையேற்றினார். பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் மங்களபாண்டியன் சங்கக்கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.  
அரசு ஊழியர் சங்க பொருளாளர் நாகராஜ், முன்னாள் மாவட்ட இணைச் செயலர் ராஜேந்திரன், கோட்ட பொருளாளர் கந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  வட்டக் கிளைச் செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com