பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கந்தா்சஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கந்தா்சஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் கந்தா்சஷ்டி விழா கடந்த அக். 28 ஆம் தேதி தொடங்கி ஒருவார காலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சனிக்கிழமை சூரசம்ஹாரமும், ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெற்றது. முத்துக்குமாரசாமிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட மணமேடைக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகா் வழிபாடு, வாஸ்துபூஜை, பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை, யாகம் போன்றவை நடைபெற்றன.

அபிஷேகத்தைத் தொடா்ந்து தம்பதி சமேதா் முத்துக்குமாரசாமிக்கு பட்டாடை, நறுமணமிக்க வண்ணமலா்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடா்ந்து சோடஷ உபசாரமும் நடைபெற்றது. மேளதாளம் முழங்க சிவாச்சாா்யாா்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது. பின்னா் மஹாதீபாராதனை நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com