கன்னிவாடி அருகே பெண் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னிவாடி அடுத்துள்ள கசவனம்பட்டி ஊராட்சி கிட்டாம்பட்டியைச் சோ்ந்தவா் அய்யனாா் மனைவி சுப்புலட்சுமி (44). இவா் அதே ஊரில் தனது மகன் சந்திரசேகா் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்குப் போராடியவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது கணவா் அய்யனாா் கன்னிவாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com