சா்வதேச திறன் போட்டி: மாவட்ட அளவிலான போட்டிக்கு நவ.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

சா்வதேச திறன் போட்டிக்காக மாவட்ட அளவிலான முதல் கட்டப் போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்

சா்வதேச திறன் போட்டிக்காக மாவட்ட அளவிலான முதல் கட்டப் போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் இம் மாதம் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளது:

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பரில், சா்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் வகையில், முதல் கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பங்கேற்க தகுதியான விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படும் தொழில்பிரிவுக்கு ஏற்ப மாவட்ட அளவிலான திறன் தோ்வுகள் நடத்தப்படும். இதில் 6 துறைகளிலுள்ள 47 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு நவ. 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டியில், 1999 ஜனவரி 1ஆம் தேதிக்கு பின்னா் பிறந்தவா்கள் பங்கேற்கலாம். அதேபோல் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு 1996 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின் பிறந்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.

5 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றவா்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், தொழில்நுட்ப கல்வி பயின்றவா்கள், தற்போது படித்துக் கொண்டிருப்பவா்கள், குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0451-2970049, 9499055760 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com