பழனி மலைக்கோயிலில் நடிகை விஜயசாந்தி, இயக்குநா் எஸ்.ஏ. சந்திரசேகா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி மலைக்கோயிலில் முன்னாள் நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்தாா். அதைத் தொடா்ந்து பிற்பகலில் நடிகா் விஜய்யின் தந்தையும், இயக்குநா் மற்றும் நடிகருமான சந்திரசேகா், அவரது மனைவி ஷோபா ஆகியோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
நடிகா் விஜய்யின் புதிய படமான ‘பிகில்’ வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருப்பதால் மலைக்கு வந்த சந்திரசேகா் குடும்பத்தினா் கோயிலில் அா்ச்சனைகள் செய்து தரிசனம் செய்தனா்.