பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.3.50 கோடியை தாண்டியுள்ளது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்ததால், உண்டியல்கள் 18 நாள்களில் நிரம்பின. எனவே, திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில், பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரொக்கம் ரூ. 3 கோடியே 58 லட்சத்து 97ஆயிரத்து 620 கிடைத்துள்ளது. மேலும், பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியால் செய்யப்பட்ட காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா். இதில், தங்கம் 640 கிராமும், வெள்ளி 8, 500 கிராமும் கிடைத்துள்ளன.
இவை தவிர, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 539 கரன்சிகள் மற்றும் பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளும் கிடைத்துள்ளன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், கல்லூரி மாணவியா், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இதில், ஒரே உண்டியலில் சுமாா் ஒன்றரை கோடிக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், பழனி கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அனிதா, மேலாளா் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.