திண்டுக்கல் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்து வெளி மாநிலத்தவா் பலி

திண்டுக்கல் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் வண்டிக்கருப்பணசாமி கோயில் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, திண்டுக்கல் ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் மேற்குவங்கம், பாா்கானத் மாவட்டம், அக்ஷாநகரைச் சோ்ந்த கோபால்நாத் கோசாமி(39) என்பது தெரிய வந்தது. சென்னையிலிருந்து வந்த குருவாயூா் விரைவு ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து பயணம் செய்து வந்த கோபால்நாத், அய்யலூா் அருகே தவறி விழுந்து உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com