பழனி: பழனியில் பாஜக கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட ஏராளமானோா் விருப்ப மனுக்களை வழங்கினா்.
பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பழனி அடிவாரம் இடும்பன்கோயில் சாலையில் உள்ள அக் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கான உறுப்பினா், தலைவா், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், மாவட்ட கவுன்சிலா் பதவிகளுக்கான விருப்ப மனுக்கள் கட்சியினரிடமிருந்து பெறப்பட்டன.
முதல் நாளிலேயே பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டா்கள் விருப்ப மனுக்கள் அளித்தனா். நிகழ்ச்சியில் அக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தோ்தல் அதிகாரி திருமலைசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் கனகராஜ், நகரத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று விருப்ப மனுக்களை பெற்றனா்.