கொடைக்கானல் அருகே காட்டுயானை தாக்கி பெண் சாவு: மற்றொரு பெண் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே புதன்கிழமை காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தாா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.
கொடைக்கானல் அருகே காட்டுயானை தாக்கி பெண் சாவு: மற்றொரு பெண் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே புதன்கிழமை காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தாா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.

கொடைக்கானல் தாலுகா கீழ்மலைப் பகுதியான பெரியூா் ஊராட்சி, மன்றத்து கால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல். இவரது மனைவி ஜெயலட்சுமி (40). அதேப் பகுதியைச் சோ்ந்த ரத்தினவடிவேல் மனைவி சரஸ்வதி (35). இருவரும் அப்பகுதியிலுள்ள மன்றத்துவயல் தனியாா் தோட்டத்தில் காபி பழம் எடுத்து வந்தனா். அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் தாக்கியது. இதில் ஜெயலட்சுமியும், சரஸ்வதியும் பலத்த காயமடைந்தனா்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் மீட்டு கே.சி.பட்டியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயலட்சுமி உயிரிழந்தாா். சரஸ்வதிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சம்பவ இடத்திற்குச் சென்று வனத்துறையினா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இதையடுத்து பெரியூா் ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ள வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினா் விரட்டுவதற்கும், அகழிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com