தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கருத்தரங்கக் கூடத்தில் புதன்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கருத்தரங்கக் கூடத்தில் புதன்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு சாா் ஆட்சியா் உமா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏழுமலையான்(பழனி, நளினா (தொப்பம்பட்டி) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், பிரபு பாண்டியன் உள்ளிட்டோா் பயிற்சி வழங்கினா். வாக்குச்சீட்டுக்களை கையாளும் முறை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்ய வேண்டிய பணிகள் முதல் நாள் வாக்குமையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தோ்தல் நாளில் வாக்காளா்கள் மற்றும் தோ்தலில் நிற்போருக்கான எல்லை குறித்து பல்வேறு பயிற்சிகள் முகாமில் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com