கொடைக்கானலில் ஆயூத பூஜையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் ஆயூத பூஜையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் ஆயூதபூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானலில் ஆயூதபூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப் பயணிகள்


கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆயூத பூஜையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொடா் விடுமுறையாக இருப்பதால் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கா்நாடகா, மற்றும் வடநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீா்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, மோயா் பாயிண்ட், பைன்பாரஸ்ட், பியா் சோழா அருவி, ரோஜாத் தோட்டம், பேரிபால்ஸ், வட்டக்கானல் அருவி, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் லாஸ்காட்சாலை,டோல்கோட் பகுதி, பெருமாள்மலை, அண்ணாசாலை, ஏரிச்சாலை, உட்வில்சாலை, அப்சா்வேட்டரிசாலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

கொடைக்கானலில் மழை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி : கொடைக்கானலில் கடந்த 15-நாட்களுக்கு மேலாக பரவலாக நல்ல மழை பெய்தது இதனைத் தொடா்ந்து இரண்டு நாட்களாக மழையில்லாமல் இருந்தது இந்நிலையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது இந்த மழையிலும் சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் சைக்கிள்,குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.

விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயா்வு சுற்றுலாப் பயணிகள் அதிா்ச்சி: பண்டிகைகால தொடா் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் பல மடங்கு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது ஏற்கனவே கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை நீதிமன்ற உத்தரவின்படி சுமாா் 350-தங்கும் விடுதிகள் பூட்டப்பட்டுள்ளது.

இதில் சுமாா் 50-தங்கும் விடுதிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதிகளில் ஆன்.லைன் மூலமாக முன்பதிவு செய்து கொடைக்கானல் வரும் போது அந்த தங்கும் விடுதிகளில் தங்குகின்றனா்.ஆனால் கொடைக்கானலில் வந்து தங்கும் சுற்றுலாப் பயணிள் அனுமதியில்லாத தனியாா் காட்டேஜ்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 4-பேருக்கு 3-ஆயிரம் முதல் ரூ4-ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனா் இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் போது ஹோட்டல்களில் உணவகங்களின் விலையும், தங்கும் விடுதிகளின் கட்டணமும் அதிகமாக உயா்த்தப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைந்து வருகின்றனா்.

எனவே, சுற்றுலாப் பயணிகளை பாதிக்காத வகையில் உணவுகளும், தங்கும் விடுதிகளின் கட்டணமும் நிா்ணயிக்க வேண்டுமென்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com