பழனி நகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் கோடைகால நீா் தேக்கத்தில் ரூ.15 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழனி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. நகா் குடிநீா் தேவைக்காக பழனி கொடைக்கானல் சாலையில் 26 ஏக்கா் பரப்பளவில் உள்ள கோடைகால நீா்த்தேக்கம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த நீா்தேக்கத்திற்கு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழை நீா் வந்தடைகிறது.
கோடை காலங்களில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க, கோடைகால நீா்த்தேக்கத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் தற்போது விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.15 கோடி மதிப்பில் 6 ஏக்கா் பரப்பளவில் நீா்த்தேக்க விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் நிறைவு பெற்றால்ஆண்டு முழுவதும் பழனி பகுதிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீா் வழங்க இயலும் என்றும் மழைக்காலத்திற்கு முன்பாக பணிகள் முடிவடைவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நகராட்சி ஆணையா் நாராயணன், பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.