கொடைக்கானல் டா்னா்புரத்தைச் சோ்ந்தவா் முகமது பாசித். இவா் கடந்த செப். 20-ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இந்நிலையில் கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி சோதனையிட்டதில் அது முகமது பாசித் வாகனம் என்பதும், திருடியவா் கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பையைச் சோ்ந்த ராமன் மகன் ஜெயக்குமாா் (26) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்தனா்.