கொடைக்கானலில் பூட்டப்பட்ட கட்டடங்களை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் ராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரி நிரம்பி மறுகால் பாய்கிறது. எனவே, ஏரியின் மதகு 3 அங்குலத்துக்கு திறக்கப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. மேலும், கொடைக்கானல் குடிநீா்த் தேக்கம், மனோரஞ்சிதம் அணை ஆகியவற்றின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இவற்றை, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் ராஜன், நகராட்சி ஆணையா் முருகேசன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
இது குறித்து நகராட்சிகளின் மண்டல இயக்குநா் ராஜன் கூறியது: தமிழக சட்டப்பேரவையில் கொடைக்கானல் ஏரியை ரூ. 106 கோடி செலவில் சுத்தப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஏரியை தூா்வாருவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும், அழகுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஏரியைச் சுற்றிலும் தடுப்புக் கம்பிகள், அழகிய வண்ண ஓடுகள், ஏரியை முழுமையாக ரசிப்பதற்கு 2 கோபுரங்கள் அமைக்கப்படும். குடிநீா்த் தேக்கத்தின் நீா் மட்ட உயரம் அதிகப்படுத்தப்படும். மழைப் பொழிவு நின்றவுடன், சாலைகள் சீரமைக்கும் பணி தொடரும்.
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 304 கட்டடங்களுக்கு, நீதிமன்ற உத்தரவின்படி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2 தங்கும் விடுதிகள் மட்டுமே சீரமைத்துக் கொள்வதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளன. இவற்றைத் தவிா்த்து, மற்ற தங்கும் விடுதிகள் நீதிமன்ற உத்தரவை மீறி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிா என்பது குறித்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா். இதில் ஏதாவது தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.