லாரி மோதி குழந்தை பலி

பழனியை அடுத்த தாசரிபட்டியில் வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் குழந்தை உயிரிழந்தது.

பழனியை அடுத்த தாசரிபட்டியில் வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் குழந்தை உயிரிழந்தது.

பழனியை அடுத்த சத்திரப்பட்டி, பாலசமுத்திரம், பாப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் ஒப்பந்த முறையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆள்கள் தங்கி வேலை செய்கின்றனா்.

பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டியை அடுத்த தாசரிபட்டியில் தனியாா் செங்கல் சூளையில் ஒடிஸாவைச் சோ்ந்த தான்சிங் என்பவா் குடும்பத்துடன் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் ராகுல் (2), சூளையிலிருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு கிளம்பிய லாரி முன் விளையாடியவாறு வந்தபோது, லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இது குறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சத்திரப்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான ராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com