கொடைக்கானலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா், தமிழக பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் அவதூறு பேச்சைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சில தினங்களுக்கு முன் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியிருந்ததாகவும், அதற்கு அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தமுமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் சேக் தலைமை வகித்தாா். இதில், நகர, ஒன்றியத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.