ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தெருவிளக்குகளை பழுதுநீக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி, பெரியகோட்டை, காப்பிலியபட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளின் வயா்கள் துரு பிடித்துள்ளது. இதனால் மின்விளக்குகளுக்கு சரிவர மின்சாரம் சப்ளை கிடைப்பது இல்லை. அதனால் தெருவிளக்குகள் விட்டு விட்டு எரிகின்றன. இதுகுறித்து பல முறை ஊராட்சி செயலா்களிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையீட்டு உடனடியாக இப்பகுதியில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com