திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற முகாமிற்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தலைமை வகித்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.வேலுச்சாமி, மேற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் சி.ராஜாமணி, நகரச் செயலாளர் ப.வெள்ளைச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் க.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் திமுகவில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்களை மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இரா.ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வீ.கண்ணன், ப.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.