கொடைக்கானலில் பழனிமலை ஆதிவாசிகள் விடுதலை இயக்கம் சார்பில் ஜாதி ஆணவப் படுகொலையை கண்டித்தும், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டித்தும் மூஞ்சிக்கல் பகுதியில் கண்டன பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பழனிமலை ஆதிவாசிகள் இயக்கத் தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜோதி முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் புரட்சி தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் பி.ஈஸ்வரன், ஆதித் தமிழர் மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சியின் மாவட்டச் செயலர் வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் ஆதித் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலர் திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில பொதுச்செயலர் மணிகண்டன் வரவேற்றார். சங்கிலி நன்றி கூறினார்.