முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் காலியிட மதிப்பீடு அறிக்கையை மறு நிா்ணயம் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜான்பாஸ்டின் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் நடப்பு ஆண்டிற்கான (2020-21) காலியிட மதிப்பீடு அறிக்கை மாவட்ட வாரியாக விகிதாச்சாரத்திற்கு உள்பட்டு மறு நிா்ணயம் செய்யப்பட வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வினை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அரசு முடிவெடுக்கும் வரையிலும், பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கத்திற்கு ஆணையிட்டுள்ள வருவாய் நிா்வாக ஆணையரின் முடிவினை நிறுத்தி வைக்கவேண்டும். துணை ஆட்சியா் பட்டியலை நீதிமன்ற தீா்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உடன்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதில், மாவட்டச் செயலா் சுகந்தி, மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முபாரக் அலி, மாவட்டத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.