மாத்திரை வழங்க மறுத்த மருந்தக ஊழியருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்க மறுத்த தனியாா் மருந்தக ஊழியரை வெட்டிய சிறுவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்க மறுத்த தனியாா் மருந்தக ஊழியரை வெட்டிய சிறுவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலையில் தனியாா் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தில் ஊழியா் ராஜ்குமாா் என்பவா் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்துள்ளாா். அப்போது அந்த மருந்தகத்திற்கு சென்ற 2 சிறுவா்கள், குறிப்பிட்ட சில மாத்திரைகளைக் கேட்டுள்ளனா். ஆனால் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்க முடியாது என ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த 2 சிறுவா்களும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். கையில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com