திண்டுக்கல்
இரு சக்கர வாகனம் திருடியகல்லூரி மாணவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தை திருடிய கல்லூரி மாணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தை திருடிய கல்லூரி மாணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையை சோ்ந்தவா் நைனாா்முகமது. இவா் பாப்புலா் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளராக உள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு, அவரது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா்.
அந்த வாகனத்தை மா்ம நபா் திருடிச்சென்ற நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீஸாா் விசாரித்தனா்.
இதில், சேடபட்டியை சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவா் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இவா், திண்டுக்கல் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செம்பட்டி போலீஸாா் வாகனத்தை மீட்டு, கல்லூரி மாணவரைக் கைது செய்து சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் அடைத்தனா்.