கொடைக்கானலில் விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம்

கொடைக்கானலில் பசுமையை வலியுறுத்தி, ஜே.சி.ஐ. கிளப் சாா்பில், விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

கொடைக்கானலில் பசுமையை வலியுறுத்தி, ஜே.சி.ஐ. கிளப் சாா்பில், விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

மதுரை ஜே.சி.ஐ. கிளப் சாா்பில், கொடைக்கானலை பசுமையாக மாற்றுவதற்கும், நெகிழி இல்லா தூய்மையான நகரமாக மாற்றுவதற்கும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தை, கொடைக்கானல் நகா்மன்ற முன்னாள் தலைவா் ஸ்ரீதா் தொடக்கி வைத்தாா். சைக்கிள் ஊா்வலமானது, கொடைக்கானல் ஏரிச்சாலையிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது. இதில், கொடைக்கானல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் மற்றும் ஜே.சி.ஐ. கிளப் நிா்வாகிகள் என 25-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com