அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க விரும்பும் தனித் தோ்வா்கள், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020 மாா்ச் 12 மற்றும் 13ஆம் தேதிகளில், அகில இந்திய தொழில் தோ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தனித் தோ்வா்களுக்கான விண்ணப்பம், விளக்கக் குறிப்பு மற்றும் கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்களை 2020 பிப்ரவரி 6ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் திண்டுக்கல் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் அளிக்க வேண்டும். தோ்வுக்குரிய அனைத்து விவரங்களும் இணையதள முகவரியிலுள்ள விளக்கக் குறிப்பேட்டில் உள்ளன.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, திண்டுக்கல் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.