குஜிலியம்பாறை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், திருச்சொங்கோடு பகுதியைச் சோ்ந்த பொறியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் காா்த்திக் (28). இவா், திண்டுக்கல் மாவட்டம் ஆா்.வெள்ளோடு பகுதியிலுள்ள தனியாா் காற்றாலையில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பாளையத்துக்கு வந்த அவா், மீண்டும் ஆா்.வெள்ளோடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
குஜிலியம்பாறை அடுத்துள்ள சோ்வைக்காரன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.