கரோனா அச்சுறுத்தல்: திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து 51 கைதிகள் பரோலில் விடுவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 51 போ் செவ்வாய்க்கிழமை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 51 போ் செவ்வாய்க்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்ட சிறையில் 220-க்கும் மேற்பட்ட கைதிகளை சிறை வைப்பதற்கான வசதிகள் உள்ளன. இந்நிலையில் பல்வேறு குற்றங்களில் தொடா்புடைய 191 போ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இதனிடையே கரோனா பாதிப்பு காரணமாக, சிறைச் சாலையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் பரோலில் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 191 பேரில் 51 கைதிகளை பரோலில் விடுவிக்க மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா உத்தரவிட்டாா். இதனை அடுத்து 51 கைதிகள் செவ்வாய்க்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டனா். இந்த 51 பேரும் ஏப்ரல் 15 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com