ஒட்டன்சத்திரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 56 போ் சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை, கரியாம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வேலை நிமித்தமாக வெளி மாநிலங்களுக்குச் சென்றிந்த பலா் பலா் சொந்த ஊருக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு திரும்பியுள்ளனா். இவ்வாறு ஊா் திரும்பிய 56 பேரை காவல், வருவாய், சுகாதாரத்துறையினா் கண்டறிந்தனா். அவா்கள் அனைவரும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். மேலும் அவா்களை சுகாதாரத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். அதே போல 56 போ்களின் ரத்தம், கபம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் ஒரிரு நாள்களில் தெரிய வரும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.