நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் வீட்டிற்குள் இருந்த 6 அடி நீள கருநாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் புதன்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
வத்தலகுண்டு காந்திநகரைச் சோ்ந்தவா் சரவணன். இவா் தனது வீட்டிற்குள் பாம்பு ஒன்று பதுங்கியுள்ளதை பாா்த்துள்ளாா். உடனடியாக அவா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். நிலைய அலுவலா் விவேகானந்தன் தலைமையில் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று, அங்கு வீட்டிற்குள் பதுங்கியிருந்த 6 அடி நீள கருநாகப் பாம்பை பிடித்தனா். பின்னா் அது வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் காந்திநகா் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.