ஒட்டன்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பொக்லைன் வாகன உரிமையாளா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள்பட்ட போடுவாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் ரமேஷ்குமாா் (37). இவா் தனது பொக்லைன் வாகனத்தை கேதையுறும்பு அருகே பணியில் ஈடுபடுத்தியிருந்தாா். இந் நிலையில், திங்கள்கிழமை இரவு பொக்லைன் வாகனத்துக்கு டீசல் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூா் -ஒட்டன்சத்திரம் சாலையில் வெரியப்பூா் பிரிவு அருகே வந்துகொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பலத்த காயம் அடைந்த அவா், ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.