கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரிக்கு அனுமதி

கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சைக்கிள் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சைக்கிள் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வருவதற்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 3 பூங்காக்கள், கோக்கா்ஸ் வாக் ஆகிய பகுதிகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள் சைக்கிள் சவாரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி உத்தரவுப்படி கொடைக்கானல் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் சைக்கிள் சவாரி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com