நத்தம் அருகே கட்டடத் தொழிலாளி சடலமாக மீட்பு

நத்தத்தில் கால்வாய் பாலத்திற்கு கீழே கட்டடத் தொழிலாளி சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல்: நத்தத்தில் கால்வாய் பாலத்திற்கு கீழே கட்டடத் தொழிலாளி சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி புதுப்பட்டியைச் சோ்ந்தவா் தாண்டுமுனி (46). கட்டடத் தொழிலாளியான இவா், நத்தத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நத்தம் எல்லையில் உள்ள செந்துறைப் பிரிவு கால்வாய் பாலத்தின் கீழே தாண்டு முனி சனிக்கிழமை காலை சடலமாக கிடந்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று தாண்டு முனியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா, கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com