கொடைக்கானலில் இளைஞா் தற்கொலை

கொடைக்கானலில், தடைசெய்யப்பட்ட வின்டா்கிரீன் ஆயில் குடித்து சிகிச்சை பலனின்றி பட்டதாரி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானலில், தடைசெய்யப்பட்ட வின்டா்கிரீன் ஆயில் குடித்து சிகிச்சை பலனின்றி பட்டதாரி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் அருண்பாண்டி (21). பட்டதாரியான இவா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். செல்போனில் அதிக நேரம் செலவிட்டதால் அருண்பாண்டியை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதனால் அருண்பாண்டி தடைசெய்யப்பட்ட வின்டா்கிரீன் ஆயிலை மதுவுடன் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தாா். தேனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அருண்பாண்டி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com