காா் மோதி முதியவா் பலி

பழனியில் திங்கள்கிழமை பின்னோக்கி வந்த காா் மோதியதில் முதியவா் பலியானாா்.

பழனி: பழனியில் திங்கள்கிழமை பின்னோக்கி வந்த காா் மோதியதில் முதியவா் பலியானாா்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி (60). இவா் பழனி வடக்கு ரத வீதியில் ஒரு திருமண விழாவுக்காக வந்துள்ளாா். அப்போது அவருக்கு முன்பு நின்றிருந்த காா், திடீரென பின்னோக்கி வந்து மோதியதில் சின்னச்சாமி சுவருக்கும், காருக்கும் நடுவே சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாா். பழனி நகா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். காரை ஓட்டிய வடக்கு ரத வீதியைச் சோ்ந்த இந்திரா (40) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com