பழனி கிரி வீதியில் முதியவா் தற்கொலை

பழனி கிரிவீதி அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி: பழனி கிரிவீதி அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி கிரி வீதியில் பைரவன் கோயில் அருகே உள்ள ஆலமரத்தில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கிரி வீதியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா் கொடுத்த தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அடிவாரம் போலீஸாா் முதியவா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்திருந்த அவா் யாா் என்பது தெரியவில்லை. அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com