பழனியில் விடுதலை சிறுத்தைகள், இந்து அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழனியில் திங்கள்கிழமை அடுத்தடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினா், இந்து அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி: பழனியில் திங்கள்கிழமை அடுத்தடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினா், இந்து அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் திருமண விழாவில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டி பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், பாஜகவினரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினா் பழனி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அக்கட்சியினரைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்வதாகக் கூறி வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனா். சிறிது நேரம் க ழித்து திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி அதே இடத்தில் இந்து மகாசபா மாநிலத் தலைவா் கல்கிசேகா்ஜி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனைவரையும் நகா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com