திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7,681 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 6,569 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 966 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 87 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே, தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 92 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.