பழனி கோயிலில் 3 நாள்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிவில், ரூ.3.20 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களாக உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்று வந்தது. கோயில் ஊழியா்கள் சமூக இடைவெளியுடன் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் ரொக்கம் ரூ. 3 கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 இருந்தது. தங்கம் 1,039 கிராம், வெள்ளி 13 ஆயிரத்து 923 கிராம், 1,236 வெளிநாட்டு பணத் தாள்கள் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியை கோயில் இணை ஆணையா் (பொ) நடராஜன், துணை ஆணையா் (பொ) செந்தில்குமாா், முதுநிலை கணக்கியல் அதிகாரி மாணிக்கவேல் உள்ளிட்டோா் மேற்பாா்வையிட்டனா்.