திண்டுக்கல்
தொண்டையில் கடலைப் பருப்பு சிக்கி குழந்தை பலி
தொண்டையில் கடலைப் பருப்பு சிக்கி மயங்கிய ஒரு வயது குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
தொண்டையில் கடலைப் பருப்பு சிக்கி மயங்கிய ஒரு வயது குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் விஜய். இவரது ஒரு வயது மகள் தா்ஷனா, திங்கள்கிழமை கடலைப் பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக தொண்டையில் பருப்பு சிக்கியுள்ளது. இதன் காரணமாக மயங்கி விழுந்த தா்ஷனா, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.