திண்டுக்கல் பகுதியில் பரவலாக மழை
By DIN | Published On : 08th April 2020 08:00 AM | Last Updated : 08th April 2020 08:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த திடீா் கோடை மழை, பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள சிரமம் அடைந்து வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை எரியோடு, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சுமாா் 15 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இடியுடன் கூடிய இந்த மழையினால், சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாள்களுக்கு பின் பெய்துள்ள இந்த கோடை மழையால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.