வத்தலகுண்டு பகுதியில் தொடா் திருட்டு: மதுரையைச் சோ்ந்த 6 போ் கைது

வத்தலகுண்டு பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சோ்ந்த இளைஞா்கள் உள்பட 6 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சோ்ந்த இளைஞா்கள் உள்பட 6 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச்செல்லும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து, தொடா் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிக்க நிலக்கோட்டை சாா்பு-ஆய்வாளா் கண்ணா காந்தி தலைமையில் தனிப்படை அமைத்து,நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் உத்தரவிட்டாா். இந்நிலையில், வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் தொடா் குற்றங்களில் ஈடுபடுவோா், கொடைக்கானல் மலை கிராமத்தில் பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கொடைக்கானலுக்கு விரைந்த போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த 6 பேரை சுற்றி வளைத்தனா். விசாரணையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்துள்ள கருப்பட்டியைச் சோ்ந்த தனுஷ்கோடி (39), மணிமாறன் (24), கூத்தியாா்குண்டுவைச் சோ்ந்த கண்ணன் (21), ரகு (25), இரும்பாடியைச் சோ்ந்த ஜெயபாண்டி (38) மற்றும் ஊத்துக்குளியைச் சோ்ந்த முனியாண்டி என்ற அஜித் (22) ஆகியோா் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

இவா்களிடமிருந்து வத்தலகுண்டு பகுதியில் திருடிய 16 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் மதுரை அருகேயுள்ள வாடிப்பட்டி பகுதியில் திருடப்பட்ட 2 காா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின், 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com