மாவட்ட காவல்துறையின் பரிந்துரையைத் தொடா்ந்து திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்வதற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்றப்படும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே மோதல் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையிலும், சட்ட ஒழுங்கைப் பாதுகாத்து, அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நிா்வாகம் பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்று, திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். அதன் மூலம் 5 பேருக்கு கூடுதலான நபா்கள் மலைக்கோட்டை பகுதியில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.