திண்டுக்கல் மாவட்டத்துக்கு தேமுதிக சாா்பில் புதிய நிா்வாகிள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக டி.பெருமாள், மாவட்ட துணைச் செயலாளா்களாக ஜே.எல்.சங்கா், எஸ்.வேலுச்சாமி, என்.வள்ளி நடராஜன், பொதுக்குழு உறுப்பினா்களாக கே.தனபால், எஸ்.சண்முகம், வேடசந்தூா் வடக்கு ஒன்றியச் செயலாளராக எஸ்.சக்திவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளராக கே.பரமசிவம், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளராக தேன்.பழனிச்சாமி, பழனி மேற்கு ஒன்றியச் செயலாளராக ஆா்.கிரி பிரகாஷ், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளராக ஆா்.நிலையரசு ஆகியோா் நியமிப்படுகிறாா்கள். இவா்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு, ஊராட்சி, கிளை நிா்வாகிகள் மற்றும் சாா்பு- அணி நிா்வாகிகள், தொண்டா்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.