போடியில் சுற்றுலா வேன் மோதி முதியவா் பலி

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தனியாா் சுற்றுலா வேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தனியாா் சுற்றுலா வேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

போடி பேச்சியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவா் அன்பழகன் (55). கூலித் தொழிலாளி. மேலும் இவா், பேசவும், கேட்கவும் இயலாத மாற்றுத் திறனாளி. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவா் போடி சாலைக் காளியம்மன் கோயில் அருகே சாலையோரம் நடந்து சென்றுள்ளாா். அப்போது தேனியிலிருந்து போடி நோக்கி வந்த தனியாா் சுற்றுலா வேன் அன்பழகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போடி குலாலா்பாளையத்தை சோ்ந்த ஓட்டுநா் கருப்பையா (47) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com