கொடைக்கானலில் 2 மகன்களுடன், தாய் மாயமானதாக வெள்ளிக்கிழமை இரவு புகாா் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் லாஸ்காட் சாலை அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் சங்கா் கணேஷ் (37). இவரது மனைவி கவிதா (28). இவா்களுக்கு விக்னேஷ்வரன்(13), ஸ்ரீவா்ஷன் சக்தி (10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். இந் நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு தனது 2 மகன்களுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கவிதாவை, பல இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து சங்கா்கணேஷ் கொடுத்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.