பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அருள் ஜோதி தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா தேவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் 407 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. உதவித் தலைமையாசிரியா்கள் நந்திவா்மன், மகேஸ்வரி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், ராஜேஸ்வரி, பிரேம் ஆனந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.