மின்மாற்றி மீது சரக்கு வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 4 போ் காயம்

வடமதுரை அருகே மின்மாற்றி மீது சரக்கு வேன் மோதி வியாழக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில், ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

வடமதுரை அருகே மின்மாற்றி மீது சரக்கு வேன் மோதி வியாழக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில், ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், நாகமங்கலத்தை அடுத்துள்ள நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). சரக்கு வேன் ஓட்டி வருகிறாா். இந்நிலையில், திண்டுக்கல் பகுதிக்கு சரக்கு ஏற்றி வந்த மணிகண்டன் வியாழக்கிழமை நள்ளிரவு மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டாா். அப்போது அவா் அந்த வேனில், தனது தாயாா் முனியம்மாள் (65), உறவினா்கள் தனலட்சுமி (65), பாக்கியம் (37) ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளாா்.

திண்டுக்கல் திருச்சி 4 வழிச்சாலையில் கொல்லப்பட்டி அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வேன் சாலையோரமாக இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) மீது மோதி விபத்து ஏற்பட்டது. வேன் மோதிய வேகத்தில், மின்மாற்றியின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைப்பட்டது. இதனால், மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் காயங்களுடன் உயிா் தப்பினா். அதன் பின்னா் 4 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com