பழனி ரோப்காா் சேவை பராமரிப்பு பணிக்காக இன்று ஒருநாள் நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் சேவை பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜன. 10) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி மலைக் கோயில் ரோப்காா் சேவை பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜன. 10) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோப்காா் பக்தா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் மதியம் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் ரோப்காா் நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com