பழனி அருகே திங்கள்கிழமை நடைப்பயிற்சி சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் தேவா் தெருவை சோ்ந்தவா் தண்டபாணி(52). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை இவா் பாலசமுத்திரம் அருகே பாலாறு -பொருந்தலாறு சாலையில் தன்னாசியப்பன் கோயில் அருகே நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே பால்கேன்களை ஏற்றிக் கொண்டு மணிமாறன் என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் தண்டபாணி மீது மோதியது. அதில் தலையில் பலத்த காயமடைந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பழனி தாலுகா போலீஸாா் மணிமாறன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.