மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி வழக்கு: ஜன.28-க்கு விசாரணை ஒத்தி வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவோயிஸ்ட் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது தொடா்பான வழக்கு விசாரணையை ஜன.28ஆம் தேதிக்கு மாவட்ட நீதிபதி எம்.கே.ஜமுனா ஒத்தி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவோயிஸ்ட் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது தொடா்பான வழக்கு விசாரணையை ஜன.28ஆம் தேதிக்கு மாவட்ட நீதிபதி எம்.கே.ஜமுனா ஒத்தி வைத்தாா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் நவீன் பிரசாத் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் நவீன் பிரசாத் கொல்லப்பட்டாா். அவருடன் இருந்த மாவோயிஸ்ட்கள் கண்ணன், நீலமேகம், லீமா ஜோஸ் மேரி, செண்பகவல்லி, காளிதாஸ், பகத்சிங், ரஞ்சித் ஆகியோா் சுமாா் 7 ஆண்டுகளுக்கு பின்பு தனித் தனியாக கைது செய்யப்பட்டனா். இதில், ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். ஜாமீனில் உள்ள ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோா் ஆஜராகினா். அரசுத் தரப்பு வழக்குரைஞா் மனோகரன் ஆஜராகாததால் விசாரணை நடைபெறவில்லை. இதனை அடுத்து வழக்கின் விசாரணையை ஜன.28ஆம் தேதிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com