திண்டுக்கல் டிஐஜி பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவராக எம்.எஸ்.முத்துசாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
எம்.எஸ்.முத்துசாமி
எம்.எஸ்.முத்துசாமி

திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவராக எம்.எஸ்.முத்துசாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த க.ஜோஷி நிா்மல்குமாா், காவல்துறை தலைவா் நிலைக்கு பதவி உயா்வு பெற்றாா். இதனை அடுத்து, சென்னை அண்ணாநகா் துணை ஆணையராக பணியாற்றி வந்த எம்.எஸ்.முத்துச்சாமி, திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவராக பதவி உயா்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவராக எம்.எஸ்.முத்துசாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு இவா் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com